Description
எழுத்தாளனின் மனைவி என்பது ஒரு சாபம், ஒரு வரம். எழுத்தாளனின் உலகியல் பொறுப்பின்மை, கனவுத்தன்மை, உணர்ச்சிநிலையின்மை ஆகியவற்றை அந்த மனைவி சுமக்கவேண்டியிருக்கும். ஆனால் அந்த மனைவிக்கு கொஞ்சம் இலக்கியம் தெரியும் என்றால் தன் கணவனுடன் இலக்கியத்தின் உலகுக்குள் செல்லமுடியும், உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் வாழமுடியும்.
ரஷ்ய இலக்கிய மேதைகளான தல்ஸ்தோயின் மனைவி சோபியா, தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி அன்னா, மாண்டில்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, நபக்கோவின் மனைவி வியரா, பல்ககாவின் மனைவி மார்கரீட்டா, மண்டல்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, சோல்செனிட்ஸினின் மனைவி நட்டாலியா ஆகியோர் பற்றிய நூல் இது.




