Description
கல்லக்குறிச்சியில் தாவடிப்பட்டு என்ற சிற்றூரிலிருந்து எழுத வந்த அமுதனின் கதைகள் மனித உணர்வுகளின் நுட்பமான பகுதிகளையும், வாழ்வியலின் உச்சத்தையும் எல்லையற்ற இந்த பெருவாழ்வின் அதீத தருணங்களையும் நம் முன்னே எளிமையாக படைத்துக் காட்டுகிறது. மிக இயல்பான கடந்து போகும் உறவு சிக்கல்கள், வாழ்வின் நுட்பங்கள், தன்னை அறிதலுக்கான தேடல் என்பன இவரின் கதைக்களங்களாக இருக்கின்றன.




