சோற்றுக் கணக்கு

நேற்று சோற்றுக்கணக்கு படித்து நெகிழ்ந்து போனேன்..எவ்வளவு நாட்கள் அந்த
ருசியை அனுபவித்திருப்பேன்..இன்றும் திருவனந்தபுரம் போனால் சாலையில்
சிறிய சந்துக்குள் இருக்கும் கேத்தல் சாயிப்பின் உணவகத்தில் போகாமல்
திரும்புவதே கிடையாது. கேத்தல் சாயிப்பின் நிஜ பெயர் முஹம்மது அப்துல்
காதர்..கிழக்கே கோட்டை புத்தரிக்கன்டம் மைதானத்தில் கெட்டிலில் (kettle)
சாயா விற்பனை செய்து தன் வியாபரத்தை தொடங்கியவர் பின்னர் சாலையில் ஒரு
சிறிய ஓட்டலை தொடங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் அங்கே உணவருந்திய
ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றி சொல்லத்தான் எத்தனை எத்தனை
கதைகள்…ஒப்புக்கு சாப்பிடுபவர்களைக் கண்டாலே அவருக்குப்
பிடிக்காது..ரசித்து ரசித்துச் சாப்பிடுபவர்களுக்கு மேலும் மேலும்
பரிமாறுவது அவரின் குணம். அவர் நடத்தி வந்த ஓட்டல் இன்றும் அதே இடத்தில்
அதே சுவையுடன் இயங்கி வருகிறது. இன்றும் அதே சிறிய சந்துக்குள் அதே சின்ன
ஓட்டல், மர பெஞ்சுகளும் மேசைகளும் அப்படியே…( அதன் பெயர் முபாரக்
இல்லை…ரெஹ்மானியா). கேத்தல் சாஹிபின் மகன் மாஹீன் அதை நடத்தி
வருகிறார். அது மட்டுமல்லாமல் கொல்லம், கொச்சின், கோழிக்கோடு போன்ற பிற
நகரங்களிலும் அதன் கிளைகள் இயங்கி வருகிறது. என்ன..அவை எல்லாம் கொஞ்சம்
ஆடம்பரமான ஓட்டல்களாக இருக்கிறது ( www.kethelschicken.com). ஆனால்
சாலையில் அந்த சிறிய உணவகத்தில் உணவருந்தும் போது வயிறு மட்டுமல்ல மனமும்
நிறைந்து விடுகிறது.. ஒரு பெரியவரின் எல்லையற்ற கருணை தலைமுறைகளைத் தாண்டி
அந்த இடம் முழுவதும் வியாபித்திருப்பதால் தானோ? இனி அந்த இடத்துக்குப்
போகும் போதெல்லாம் கேத்தல் சாஹிப் எங்கோ மறைந்திருந்து ‘கழிக்கெடா
எரப்பாளி’ என்று சொல்லுவதைப்போல் தோன்றும்…நிச்சயம்..நன்றி
ஜெயமோகன்…இந்த உன்னதமான அனுபவத்திற்கு..

அன்புடன்,

லியோ முகேஷ், திருச்சூர்

 25.00

448 in stock (can be backordered)

SKU: VB00173 Category:

Description

-ஜெயமோகன்