அல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்

இந்தியப் புனைவிலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமையான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை வாசித்து முடிக்கையில் மரணத்தின் வாசனை ஆழ்ந்த ஓர் அறையில் தனித்து விடப்பட்ட மனநிலையையும், உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர்ந்து நம்மோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வையும் தரக்கூடியது.

சக்காரியா படைப்பின் பின்புலமும் அக்கதைகளின் துள்ளும் நகைச்சுவையும், அதனூடே மறைந்திருக்கும் அரசியலும் மீண்டும் மீண்டும் அவர் படைப்புகளை மொழிபெயர்க்கத் தூண்டுவதாக கே.வி.ஜெயஸ்ரீ கூறுகிறார்.

 150.00