Description
காட்டு நெல்லி மரங்கள் பசுங்காய்களுடன் நிறைந்திருந்தன. செந்நிற இலைகளுடன் நுனா மரங்கள். பெயரறியாச் செடிகள், காட்டாமணக்குப் புதர்கள் படர்ந்திருந்த காட்டுக்கொடிகளில் ஊதா வண்ண மலர்கள், கொத்து கொத்தான சிவந்த பழங்கள், தட்டாரைப்பூச்சிகள், நீலவண்ண மலர்கள் தேனீக்கள் ஓணான்கள் நாகணவாய்ப்பறவைகள், தேன் சிட்டுகள், வண்ணாத்திப் பூச்சிகள், தவிட்டுக்குருவிகள், மணிப்புறாக்கள் என காடு உயிர்ப்புடன் இருந்த உள்பகுதியில் அவளை மீண்டும் பார்த்தேன். கையில் பொன்னிறக் கொன்றை மலர்க்கொத்துடன காட்டு வாகை மரத்தடியில் நின்றிருந்தவள் என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.
காஞ்சிர மரத்தடியில்…